யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கச்சாய் வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என்பவரே காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் அவரது உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்புக்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.