நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பணிபுரிந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து கடந்த 2003 – ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் சிவகார்த்திகேயனின் தந்தை உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும் , அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.
அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன், என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என்றும் , நான் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப்பெறாதவன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு நொடியும் தனது தந்தையின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது..living wit his memories every second..I think I’m not lucky enough to live many years wit my role model & biggest inspiration..Miss u pa… https://t.co/Jik5DJ4yQs
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 10, 2018