வாள்களுடன் பயணித்த சிலரை, இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்குப் பயந்தோடிய வாள்வெட்டுக் குழுவினர், பொலிஸாரைக் கண்டதும் தாம் கொண்டு வந்த வாள்களைப் போட்டு விட்டு ஓடித் தப்பியுள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் உந்துருளியில் இளைஞர்கள் சிலர் வாள்களுடன் பயணித்துள்ளனர். வீதியில் நின்றிருந்தோரை வாளைச் சுழற்றிக் காண்பித்து மிரட்டியுள்ளனர்.
வாள்களுடன் பயணித்தவர்களைக் கண்ட இளைஞர்கள் சிலர், அவர்களை விரட்டியுள்ளனர்.
ஆனைக்கோட்டை சந்தியூடாக உயரப்புலம் வீதியில் வாள்களுடன் பயணித்துள்ளனர்.
கொக்குவில் வராகி அம்மன் கோயில் பகுதிக்கு அண்மையாகப் பொலிஸார் நின்றனர். அவர்களை அவதானித்த வாள்களுடன் வந்த இளைஞர்கள் குழு, தாம் கொண்டு வந்த வாள்களைப் போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
வாள்களுடன் வந்தவர்களை விரட்டி வந்த இளைஞர்கள் குழுவினர், பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.