கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை விஸ்வமடுவுக்கே நியக்குமாறு கோரிக்கை

விஸ்வமடு பாதுகாப்பு முகாம் பொறுப்பதிகாரியாகவிருந்த கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை மீண்டும் அதே பிரதேசத்துக்கு நியமிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவின் முன்மாதிரி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்த முன்மாதிரியைத் தொடர அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். விஷ்வமடு மக்களின் கோரிக்கைப்படி அவரின் இடமாற்றத்தை ரத்து செய்து அப்பகுதிக்கே தொடர்ந்தும் அவரை நியமிக்குமாறு நியமிக்குமாறும் விமல் வீரவங்க அக்கடிதத்தில் கோரியுள்ளார்.