தனியார் கல்வி நிலையத் துக்கு வந்த பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த 41 வயதான கணிதபாட ஆசிரியர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றார் என்று சங்கானைப் பிரதேச செயலகத்துக்கு அநாமதேய முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக, பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையில் ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை மாணவிகளை ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கு ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு அழைத்துள்ளமையும், அவர்களிடம் பாலியல் ரீதியான தொல்லை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தகவலை வெளிப்படுத்தத் தயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை வெளியில் தெரியப்படுத்தினால் பெற்றோரைக் கொலை செய்துவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியமையும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தயங்கியமைக்கு காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இருப்பினும் ஒரு சில மாணவிகள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைவாக ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.