யாழ் வட்டுகோட்டையில் சிறுமிகளிற்கு ஆசிரியர் செய்த கொடூர செயல்!

தனி­யார் கல்வி நிலை­யத் துக்கு வந்த பதின்ம வய­துச் சிறு­மி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை வழங்­கிய குற்­றச்­சாட்­டில் வட்­டுக்­கோட்­டை­யைச் சேந்த 41 வய­தான கணி­த­பாட ஆசி­ரி­யர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வட்­டுக்­கோட்­டை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லைக்கு முன்­பா­க­வுள்ள தனி­யார் கல்வி நிலை­யத்­தில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் அவ­ரி­டம் கற்­கச் செல்­லும் பதின்ம வயது மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுக்­கின்­றார் என்று சங்­கா­னைப் பிர­தேச செய­ல­கத்­துக்கு அநா­ம­தேய முறைப்­பா­டு­கள் கிடைத்­துள்­ளது.

கிடைக்­கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக, பிர­தேச செய­ல­கத்­தி­னால் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசி­ரி­யர் கற்­பிக்­கும் பாட­சா­லை­யில் ஆரம்­பத்­தில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது.

பாட­சாலை மாண­வி­களை ஆங்­கி­ல­மொழி மூல­மான வகுப்­புக்கு ஆசி­ரி­யர், தனி­யார் கல்வி நிலை­யத்­துக்கு அழைத்­துள்­ள­மை­யும், அவர்­க­ளி­டம் பாலி­யல் ரீதி­யான தொல்லை வழங்­கி­யுள்­ள­மை­யும் தெரி­ய­வந்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் அவர்­க­ளது பெற்­றோர்­கள் தக­வலை வெளிப்­ப­டுத்­தத் தயங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனை வெளி­யில் தெரி­யப்­ப­டுத்­தி­னால் பெற்­றோ­ரைக் கொலை செய்­து­வி­டு­வேன் என்று ஆசி­ரி­யர் மிரட்­டி­ய­மை­யும், பாதிக்­கப்­பட்ட தரப்­புக்­கள் தயங்­கி­ய­மைக்கு கார­ணம் என்று பொலிஸ் வட்­டா­ரங்­கள் தக­வல் தெரி­வித்­தன.

இருப்­பி­னும் ஒரு சில மாண­வி­கள் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக ஆசி­ரி­யர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.