பதவியிலிருந்து இன்று விலகுகிறார் காதர் மஸ்தான்….!! ஜனாதிபதியுடன் நேரில் சந்திப்பு!!

இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  இன்று  வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இந்து கலாசார பிரதியமைச்சுப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை அவர் நேற்றைய தினம் முன்வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.அவரது எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.அதற்காக ஜனாாதிபதியை  இன்று சந்திக்கின்றேன் என பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்துள்ளார்