இந்தப் பெண்கள் ஏ – 32 வீதியில் வாழ்க்கை நடத்தும் கொடுமை!! மனச் சாட்சி உள்ளவர்கள் படிப்பார்களா??

ஏ- –32 வீதி­யால் பய­ணிக்­கும் அனை­வ­ரும் பார்க்­கும் காட்சி வீதி­யோ­ரத்­தில் வைத்து விற்­கப்­ப­டும் பாலைப் பழங்­கள். அவற்றை விற்­போர் பெரும்­பா­லும் குடும்­பத்­தைத் தலை­மை­தாங்­கும் பெண்­களே.

வீதி­யில் வாக­னங்­கள் வரும்­போது பைக­ளில் உள்ள பாலைப் பழங்­க­ளைக் காட்­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான வாக­னங்­கள் அவர்­க­ளைப் பொருட்­ப­டுத்­தாது சென்­று­ வி­டு­கின்­றன.

கடந்து செல்­லும் வாக­னங்­களை ஏமாற்­றத்­து­டன் நோக்­கி­ய­வாறு அவர்­கள் அடுத்த வாக­னத்தை எதிர்­பார்த்து வீதி­யோ­ரத்­தில் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

அந்­தப் பெண்­க­ளில் பலர் போரால் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். போரில் கண­வனை இழந்­த­வர்­க­ளும், கண­வர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளும் என்று அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் போரின் வடு பதிந்­துள்­ளது.

இறு­திப் போரில் கண­வர் காணா­மல்­போக மக­னின் கல்­விக்­காக வீதி­யில் கால் கடுக்க நின்று பாலைப் பழம் விற்­கின்­றார் 55 வய­துத் தாய் ஒரு­வர்.

அவ­ரி­டம் சிறிது பேச­வும் கண்­க­லங்­கு­கின்­றார். ‘‘ஒரு­வ­ரும் உதவி இல்லை. 15 வயது மக­னின் கல்­விக்­காக வட்­டக்­கச்­சி­யில் இருந்து வந்து, இப்­ப­டிப் பாலைப் பழங்­கள் விற்­கின்­றேன்’’ என்று அவர் கண்­க­லங்­கி­னார்.

எங்­க­ளுக்கு யாரும் உத­வி­கள் வழங்­கி­னால் இப்­படி வீதி­யில் நிற்க வேண்டி இருக்­காது. நாங்­கள் சுய­மாக உழைப்­ப­தற்­காக வழி­வ­கை­களை யாரே­னும் ஏற்­ப­டுத்­தித் தந்­தால் கோடி புண்­ணி­ய­மாக இருக்

கும் என்று அவர் ஆதங்­கத்­து­டன் கூறினார்.

இப்­படி அந்த வீதி­யில் நெடு­கி­லும் பாலைப் பழங்­க­ளு­டன் நிற்­கும் ஒவ்­வொரு பெண்­க­ளி­டத்­தி­லும் ஒவ்­வொரு சோகப் பின்­னணி உண்டு.

எப்­ப­டி­யா­வது சுய­மாக உழைத்து வாழ்ந்­து­விட வேண்­டும் என்ற உத்­வே­கத்­து­டன் உணர்­வு­களை அடக்கித் தமக்கு உத­வி­கள் ஏதும் கிட்­டாதா என்ற ஏக்­கத்­து­டன் அவர்­கள் வீதி­யில் கால்­க­டுக்க நிற்­கின்­ற­னர்.