அரிசி கழுவிய தண்ணீரில் அதிஷ்டம்! இனி தூக்கி வீச மாட்டீர்கள்

ஆசிய பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரிசி தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.

முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த அரிசி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏன் தற்போதைய காலத்தில் கூட நிறைய பெண்கள் கெமிக்கல் பியூட்டி பொருட்களுக்கு பதிலாக அரிசி தண்ணீரை தான் பியூட்டி பொருளாக பயன்படுத்துகின்றனர்.

இந்த பொருளை வெவ்வேறு விதமாக கூட உங்கள் தினசரி பியூட்டி முறைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு பல அதிஷ்டமான நன்மைகளை பெற முடியும். ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு அது தெரியாது. கீழே கொடுக்கப்பட்ட முறையை முயற்சி செய்து பாருங்கள்..

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்
  • 2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • இதை முகத்தில் தடவவும்.
  • பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.
  • இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்