மனைவியின் பிரிவை தாங்க முடியாத கணவன் செய்த வேலையை பாருங்கள்….நெஞ்சை உருக்கும் காட்சி

சென்னையில் காதல் திருமணம் செய்த பெண், கணவனையும், இரு குழந்தைகளையும் பிரிந்து இலங்கையில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதால், பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூர் காமதேனு நகரில் வசித்து வந்தவர் ஹபீப்ரகுமான். சமையல் கலை நிபுணரான இவரும் மதுரவாயல் அகதிகள் முகாமில் வசித்துவந்த அனிஷா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு 7 வயதில் நைப் , 4 வயதில் ரேயான் என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் காதல் கசந்தது. இதனால் கணவனையும் தனது இரு குழந்தைகளையும் பிரிந்த அனிஷா இங்கிருந்து இலங்கையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஹபீப் ரகுமானின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசியதால் காவல்துறையினர் உதவியுடன் வீட்டை திறந்து பார்த்த போது ஹபீப் ரகுமான் , அவரது இரு மகன்களின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அவர்கள் 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சடலங்களை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த மதுரவாயல் காவல்துறையினர் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்த போது தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது.

கருத்துவேறுபாட்டால் பிரிந்து சென்ற தனது மனைவியை சமாதானப்படுத்த ஹபீப் ரகுமான் பல முயன்றும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

இரு குழந்தைகளையும் பள்ளியிலும் சேர்க்க வில்லை. மேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மதுரவாயலில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற அனிஷா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பார்க்க மறுத்து இலங்கைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் மனம் உடைந்த ஹபீப் ரகுமான் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் தனது இரு மகன்களுடன் உணவில் விஷம் கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்

விரும்பி விரும்பி காதலித்த கணவரையும் , அந்த காதலுக்கு சாட்சியாக பிறந்த இரு குழந்தைகளையும் சந்திக்க மறுத்து, இறுக்கமான மனதுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி அனிஷாவின் நடவடிக்கையால் 3 உயிர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளதாக அவரது நண்பர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.