காதல் என்ற பெயரில் இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த நபர்

வட ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணை சமூக வலைதளம் மூலமாக காதலித்து திருமணம் செய்துள்ளார் சுவிஸ் நபர். குறித்த பெண் சுவிஸ்சில் குடியிருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர்கள் இருவருக்கும் 2012ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னரே தமது வாழ்க்கையில் நரக வேதனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மனைவி என்றும் பாராமல் அந்த நபர் தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

வாரத்தில் 4 முறை கூட பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த நாட்களும் உண்டு எனக் கூறும் அவர், அவருடன் இருந்த அந்த குறுகிய காலகட்டத்தில் சுமார் 40 முறை வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.