ஐ.நா சபை; தமிழனுக்கு மாபெரும் கௌரவம்!

சென்னையைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி என்ற இளைஞர்க்கு கனடா மற்றும் ஐ.நா பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையை சேர்ந்தவர் அமர் இவர் தற்போது தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய டைரக்டர் ஜெனரல், இந்திய தொழில் முனைவோர் கவுன்சில் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இவர் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவராக சென்னையில் இருக்கிறார், அதுமட்டுமின்றி சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தவதறகான பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க 2011-ஆம் ஆண்டு இருந்து ஈடுபட்டுவருகிறேன்,எனக்கு கிடைத்த இந்த பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தொடர்ந்து நான் இந்த பணிகளை செய்துவருவேன் என கூறினார்.