2016ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தின் மூலம் வில்லத்தனம் கலந்த பாடசாலை மாணவனாக ஷாரிக் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார், இவர் பிரபல நடிகரான இவர் பிரபல நட்சத்திரமான ரியாஸ்கான் மற்றும் உமா தம்பதிகளின் அன்பு மகன் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
பிக்போஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் ஷாரிக் நீங்காத இடம்பிடிப்பார் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில். பிக்போஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யாவின் மீது காதல் வசப்பட்டுள்ளார் என்பது போல் தெரிகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார், ஷாரிக்கின் அம்மாவான உமா,
அதில் தன்னுடைய மகன் ஐஸ்வர்யாவை காதலிக்க வாய்ப்பே இல்லை என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உமா கூறுகையில் ” இதுவரை ஷாரிக் ஐஸ்வர்யாவிடம், ‘I like you’ என்கிற வார்த்தையை மட்டும் தான் பயன்படுத்தியுள்ளார். நமக்கு ஒருவரை பிடிக்கிறது என்றால் இப்படி கூறுவது சாதாரணமான விடயம் தான் எனவும், இது வரையும் ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் ‘I love you’ என்ற வார்த்தையை கூறியதே இல்லை எனவும், அப்படி அவர் சொல்லி இருந்தால் தயவு செய்து அதனை வீடியோ எடுத்து எனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.
அதே போல் வெளியில் போய் மற்றதை பேசிக் கொள்ளலாம் என கூறுகிறார் ஷாரிக். அப்போது ஐஸ்வர்யா என்ன சொன்னார் என்பது காட்டப்படவில்லை என்றும், பிக்போஸ் விளையாட்டிற்காக கூட இவர் ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகுகிறாரா என்பது இவர் வெளியே வந்தால் தான் தெரியும் என உமா கூறியுள்ளார்.