அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் இரண்டு முதியவர்களை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் வல்ஹல்லாவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 70 வயது மிக்க இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.