சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் இராணுவம்!

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்காக விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன.இதன்காரணமாக சில தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்தினைத் தொடர்ந்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தையும், தீவிரமாக கண்காணிக்கப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்கள் ஊடான பயங்கரவாதம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் இராணுவம் விஷேட பிரிவு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது.

அத்துடன், இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வில் சமூக ஊடகம் மற்றும் நம்பகதன்மை என்ற தலைப்பில் கீழ் விசேட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.