தினமும் கணவனை ஏமாற்றி கள்ளக்காதலனுடன் உல்லாசமாய் இருந்த மனைவி!. சுதாரித்த கணவனால் கடைசியில் நேர்ந்த கொடுமை!.

ஆந்திர மாநிலத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். ராம்பாபு என்பவருக்கும், நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

கடந்த ஒரு ஆண்டாக மனைவியின் நடத்தையில் ராம்பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை வந்துள்ளது. அவர்கள் போட்டுக்கொண்ட சண்டை ஒருகட்டத்தில், காவல் நிலையம் வரை சென்றது. பின்பு அங்கு சமாதானம் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் ராம்பாபு அவரின் மனைவியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த மறுதினமே காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

காவல்நிலையத்துக்கு சென்ற ராம்பாபு, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நாகலட்சுமி தினமும் இரவு தூக்கமாத்திரையை கொடுத்து என்னை தூங்கவைத்து விட்டு அவளின் கள்ளக்காதலுடன் தொடர்பு கொள்வார் என கூறினார்.

வழக்கம்போல், நேற்று முன் தினம் எனக்கு தூக்க மாத்திரையை கொடுத்தார். அனால் அதை நான் சாப்பிடாமலேயே சாப்பிட்டது போல நடித்தேன். பின்னர் நான் தூங்கிவிட்டதாக நினைத்த நாகலட்சுமி வேறு நபருடன் பக்கத்து அறையில் இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் நாகலட்சுமியை அடித்து கொன்றேன் என கூறியுள்ளார். ராம்பாபு அளித்த வாக்குமூலம் உண்மைதானா என விசாரித்து வரும் காவல்துறையினர் அவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.