பதறிப்போன பெற்றோர்!! யுவதி எடுத்த விபரீத முடிவு!

வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாம்பல் தோட்டம் ஜயப்பர் வீதியில் வசித்து வரும் 22வயதுடைய வி.வித்தியா என்ற யுவதியே நேற்றிரவு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு செல்வதற்காக தனது குடும்பதாரிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதற்கு குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்த சமயத்தில் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.