மகளை கர்பமாக்கிய கொடூர தந்தை!. தாய் எடுத்த முடிவு!.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்மா என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்துவந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால், அவரின் மூத்த மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட சர்மாவின் மனைவி மூத்த மக்களிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து சர்மாவின் மகள் தான் பெற்றெடுத்த குழந்தைக்கு அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்மாவின் மனைவி இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சர்மாவை பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

சர்மா தான் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்ற மகளையே தந்தை துஸ்ப்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.