இந்தியாவிற்கு பறக்கின்றார் மஹிந்த ராஜபக்ஷ..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா பயணமாகவுள்ளார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் இந்தியா செல்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரா கலாநிதி சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.