நடுரோட்டில் சரமாரியாக தாக்கி கொண்ட பெண்கள்! காணொளி

சவுதியில் கார்கள் உரசி ஏற்பட்ட விபத்தில் குழந்தையை கீழே தூக்கி வீசி 5 பெண்கள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரியாத்தில் இரு கார்களில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒன்றுக்கொன்று உரசி லேசான விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நடுரோட்டில் இறங்கி ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

இதன் நடுவே தான் கையில் வைத்திருந்த குழந்தை கீழே விழுந்த பின்னும், அதனைத் தூக்கி வீசி விட்டு சண்டையில் பெண் ஒருவர் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.