பரபரப்பு விளக்கமளித்த சீரியல் நடிகை நிலானி.!

சீரியல் நடிகை நிலானி, காந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார், இந்நிலையில்அவர் நிலானியை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார் .

ஆனால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பாத நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார் என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் போலீசார் இதுகுறித்து நிலானியிடம் விசாரிக்க முயன்றபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் வீட்டிலும் இல்லை.

இந்நிலையில், இன்று காலை கமிஷனர் அலுவகம் வந்த நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் ‘எனது காதலர் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல.

அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில்தான் நான் இருந்தேன். ஆனால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துக்கொண்டே இருந்தார். எனவே அவரை விட்டு விலகுவது என முடிவெடுத்தேன்.

மேலும் சமூக வலைத்தளங்களில் நானும் காந்தியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பரப்பி என் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.