யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..! வங்கி பணி..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஜயா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 330 புரபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: 03/2018

பதவி: Probationary Assistant Manager (Credit)

மொத்த காலியிடங்கள்: 330

மாத சம்பளம்: ரூ.23,700 – ரூ.42,020

வயதுவரம்பு: 21 – 30

தகுதி:

* ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்+ நிதியியல் துறையில் எம்பிஏ, முதுகலை பட்டம் ( அ )
* வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் ( அ )
* Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுபிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்றவர்களுக்கு ரூ.100 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2018

விண்ணப்பிக்கும் முறை: http://www.vijayabank.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு : https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/PAM/English%20Detailed%20Advertisement_PAM_330%20vacancies_Final.pdf