பதினேழு வயது சிறுவன், 28 வயது காதலி….!

பதினேழு வயது சிறுவன், 28 வயது காதலியை தன் வீட்டிற்கு கூட்டி வந்து செய்த ரகளை….!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், உள்ள ஓட்டல் ஒன்றில், 17 வயது சிறுவன் வேலை பார்த்து வந்தான். அந்த ஓட்டல் முதலாளியின் மகளுக்கு வயது 28. திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தன் தந்தைக்கு உதவியாக, ஓட்டலைக் கவனித்து வந்தார்.

அங்கு வேலை பார்த்த சிறுவனுக்கும், அந்தப் பெண்ணிற்கும் நாளடைவில், காதல் மலர்ந்தது. இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். தங்கள் காதலை சமூகம் ஏற்றுக் கொள்ளாது, என்பதைத் தெரிந்து கொண்ட, அந்தக் காதல் ஜோடி எஸ்கேப் ஆகியது.

இதற்கிடையே, தன் மகளை, தன் ஓட்டலில் வேலை பார்த்த சிறுவன் கடத்திச் சென்று விட்டதாக, அந்தப் பெண்ணின் தந்தை, மேட்டுப்பாளையம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்கேப் ஆன காதல் ஜோடி, சில நாட்கள், திருப்பூரில் உள்ள நுாற்பாலையில் தங்கி வேலை பார்த்தனர். தங்களை போலீசார் தேடுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள், அந்த சிறுவனின் வீட்டிற்குச் சென்றார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே உள்ள எரியோட்டில் உள்ள, தன் வீட்டிற்கு, அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றான், அந்தச் சிறுவன்.

அவர்களைக் கண்ட, சிறுவனின் பெற்றோர், இருவரையும் திட்டித் தீர்த்தனர். உடனே அந்த சிறுவன், தாங்கள் இருவரும், அரளி விதையை அரைத்து தின்று விட்டதாகக் கூறி திடீர் என்று மயங்கி விழுந்தான். அந்தப் பெண்ணும் மயங்கி விழுந்தாள்.

பதறிய அந்த சிறுவனின் பெற்றோர், அவர்கள் இருவரையும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது, காதலர்கள் விஷம் சாப்பிடாமல், பொய் சொல்லி நாடகமாடியது தெரிய வந்தது.

இவர்களைக் கண்டறிந்த போலீசார், அந்தப் பெண்ணுக்கு புத்திமதி சொல்லி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். சிறுவன், தன் பெற்றோரிடம் செல்ல மறுத்தான். அதனால், அவனைக் காப்பகத்தில் சேர்த்தனர்.