இனி கவலை வேண்டாம்…! எய்ட்ஸ், புற்று நோயைக் குணப்படுத்த, போகா் கால ஓலைச் சுவடிகளில் மருத்துவக் குறிப்புகள்…!

இனி கவலை வேண்டாம்…! எய்ட்ஸ், புற்று நோயைக் குணப்படுத்த, போகா் கால ஓலைச் சுவடிகளில் மருத்துவக் குறிப்புகள் கண்டு பிடிச்சாச்சு…!

அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், இன்னும், பல வியாதிகளுக்கு, மருந்து கண்டு பிடிக்கப்படவேயில்லை. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், பல அரிய வகை மூலிகைகளைக் கொண்டு, மிக சிக்கலான நோயையும் குணப்படுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், தர்மத்துபட்டி அருகே வள்ளலார் குருகுல ஆசிரமம் உள்ளது. 72 வயதான யோகனந்தர் என்பவர், இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக, அரிய மூலிகைகளைக் கொண்டு, சித்த வைத்தியம் செய்து வருகிறார்.

இந்த ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் சித்தர்களுக்கு கோயில் கட்ட எண்ணி, வானம் தோண்டிய போது, ஒரு கல் பெட்டி இவருக்கு கிடைத்தது. அந்தக் கல் பெட்டிக்குள், ஒரு ஓலைச் சுவடிகள் கட்டாக இருந்தது.

இதனை, யோகானந்தர் ஆய்வு செய்த போது, அது போகர் சித்தர் வாழ்ந்த காலத்தில்,எழுதப்பட்ட ஓலைச் சுவடி என்பது தெரிய வந்தது. அதில், பல வகையான மூலிகைகளைக் கொண்டு, தீராத நோயையும் குணப்படுத்தும் மருத்துவக் குறிப்புகள் இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.

இதனைக் கொண்டு, இவர் பலருக்கு சித்த வைத்தியம் செய்து வருகிறார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பலரையும் குணப்படுத்தி உள்ளார். எத்தகைய நோயானாலும், அதிகபட்சமாக, மூன்று மாதத்திற்குள் குணப்படுத்தி விடலாம், என்றும் கூறி, ஆச்சர்யப்பட வைக்கிறார், இந்த சித்த வைத்தியர்.