அபிராமி வழக்கில் திருப்பம்..! நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு ..!!

சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்ற பெண், ஓட்டலில் பணிபுரிந்து வந்த சுந்தரம் என்பவருடன் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் கொண்டிருந்து வந்தார். மேலும் அவருடன் வாழவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என எண்ணி தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு வருகின்ற அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.