மூதாட்டியின் வாழ்வில் விளையாண்ட அதிமுக விளையாட்டுத் துறை அமைச்சர்..!

அதிமுக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது மூதாட்டி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டிக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பசந்திரம் கிராமத்தில் 32.87 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.

இதனை போலி ஆவணங்கள் தயாரித்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த மூதாட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து மூதாட்டி அஞ்சனா ரெட்டி தாக்கல் செய்த மனுவில்,

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவரது உறவினர்களுக்காக என் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்கிறார்.

இந்த நில விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளார்.

இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை கையில் எடுத்த நீதிபதி மகாதேவன் தரப்பு நிலத்தின் பட்டா மாற்றம் செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யக்கூடாது எனவும், தற்போதைய நிலை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கை வருகிற அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னர் சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.