பேராசிரியைக்கு அரிவாளால் வெட்டு! ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கனகப்புரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40). இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி (வயது 33). அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பம் நடைபெற்ற நாளன்றும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த கணவன் எட்வர்ட், மனைவி ஷைனியை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த ஷைனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே எட்வர்ட் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடுவிட்டார்.

தப்பி ஓடிய எட்வார்ட்டை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று காலை கர்நாடக மாநிலம் மாண்டியா அருகில் எலியூர் பகுதியில் தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டுக்கப்பட்டது. அங்கு பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்துள்ளது.

அந்த முகவரியை விசாரித்ததில் இறந்தவர் எட்வர்ட் என்பது தெரியவந்தது. மனைவியை வெட்டியதால் காவல் துறை நடவடிக்கைக்கு பயந்து எட்வர்ட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.