தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்த நிலையில், பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்திருக்கிறது.
இது பற்றி அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி அரவிந்த் பாண்டே கூறுகையில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை இருப்பது அவசியம். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்திருக்கிறோம்.
மேலும் 2 குழந்தைகளுக்குமேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என பற்றிய பரிசீலனையும் இருக்கிறது. அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.