அநீதியை தட்டிக்கேட்ட பொலிஸ் பணி இடைநிறுத்தம் : நல்லாட்சியின் சட்டம் !

களுத்துறை தெபுவான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் இறங்கி நேற்று போராட்டம் நடாத்தியுள்ளார்.

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கூறியுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் இறங்கி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராகவே அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் குழந்தை கூட அந்த இடத்தில் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.