பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்.!!

இந்திய மற்றும் சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்படுகிறது” என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வருகின்ற 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கூறி வந்த நிலையில் தற்போது டெல்லி வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக முதல்வர் இன்று இரவு 7 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது