யாழ்ப்பாணத்தில் சிக்கலில் சிக்கிய பொலிஸார்!

யாழ்ப்­பா­ணத்­தில் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் 5 பேர் நேற்று அதி­ர­டி­யாக பணி­யில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வாக இந்த இடை­நி­றுத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த புதன் கிழமை யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தைச் சேர்ந்த பெருங்­குற்­றப் பிரி­வி­ன­ருக்கு கூண்­டோடு இட­மாற்­றம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு­வர் பணி இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தார்.நேற்று 5 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் பணி இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள வர்த்­தக நிலை­யத்­தில் 10 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான பொருள்­கள் களவு போயுள்­ளன. கடை உரி­மை­யா­ளர் யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யப் பெருங்­குற்­றப் பிரி­வில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

அங்கு கட­மை­யி­லி­ருந்த சார்­ஜன் தர அதி­காரி, பதி­வேட்­டுப் புத்­த­கத்­தில் வெளி­யில் செல்­வ­தற்­கான பதி­வு­கள் எத­னை­யும் மேற்­கொள்­ளாது சம்­பவ இடத்­துக்­குச் சென்­றுள்­ளார். விவ­ரங்­க­ளைத் தனது குறிப்­புப் புத்­த­கத்­தில் பதிவு செய்­துள்­ளார்.

ஆனால் குற்­றப் பதிவு புத்­த­கத்­தில், தனது குறிப்­புப் புத்­த­கத்­தில் பதிவு செய்­ததை அவர் ஒட்­ட­வில்லை. 26ஆம் திக­தியே அதை ஒட்­டி­யுள்­ளார்.

இரண்டு நாள்­க­ளாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தைக் கடை உரி­மை­யா­ளர் விட­யத்தை வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றுள்­ளார். அவ­ரின் பணிப்­புக்கு அமை­வாக யாழ்ப்­பாண மாவட்ட உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் தலை­மை­யில் விசா­ர­ணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. விசா­ரணை இடம்­பெற்­றது.

விசா­ர­ணை­யின்­போது இந்த விட­யங்­கள் கண்டு பிடிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் பெருங்­குற்­றப் பிரி­வில் பணி­யாற்­றிய 17 பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யாக இட­மாற்­றம் வழங்­கப்­பட்­டது. சார்­ஜன் தரத்­தைச் சேர்ந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில் பணி நிறுத்­தம் செய்­யப்­பட்­டார்.

தொடர்ந்­தும் விசா­ர­ணை­கள் நடந்­தன. பதி­வேட்­டுப் புத்­த­கத்­தில் வெளி­யில் செல்­வ­தற்­கான பதி­வு­கள் எத­னை­யும் மேற்­கொள்­ளாது சம்­பவ இடத்­துக்­குச் சென்ற சார்­ஜ­னு­டன் யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தில் பதில் பொலிஸ் அதி­கா­ரி­யா­கக் கட­மை­யாற்­றிய உத­விப் பொலிஸ் அதி­கா­ரி­யும் சென்­றார் என்­பது தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து அந்த அதி­கா­ரி­யும் நேற்­றுப் பணி இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளார்.

அண்­மை­யில கொடி­கா­மம் பகு­தி­யில் பொலிஸ் வாக­னத்­தைத் திரு­டிச் சென்ற சம்­ப­வம் தொடர்­பில் கவ­னக்­கு­றை­வா­கச் செயற்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் அந்த வாக­னத்­தில் சென்ற நான்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் பணி இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.