பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் , அதிரவைக்கும் காரணம்.!

பீகார் மாநிலத்தில் வேறு சாதி இளைஞனை காதலித்து ஊரை விட்டு ஓடிய பெண்ணை, கிராமத்தினர் மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அருகே உள்ள ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதி இளைஞனை காதலித்து வந்துள்ளார்.மேலும் சில நாட்களுக்கு முன்பு, வேறு சாதி ஆணுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அந்த பெண்ணை தேடி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் அந்த பெண்ணை தேடி வந்தநிலையில் அவர்கள் இருவரும் பக்கத்து கிராமத்தில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிச்சென்று அடித்து இழுத்து வந்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து பல மணி நேரம் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில் பெண்ணின் தந்தை அந்த பெண்ணை அடிக்க, பின்னர் தொடர்ந்து ஊர் மக்கள் ஒவ்வொருவராக அந்தப் பெண்ணைத் தாக்கினர்.