கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலாபாஸ்கரின் மனைவி லஷ்மியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலாபாஸ்கர் கடந்த 25-ஆம் திகதி தனது குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார்.
இதில் அவரின் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்த பாலாபாஸ்கர், அவர் மனைவி லஷ்மி மற்றும் கார் ஓட்டுனர் அர்ஜூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாபாஸ்கர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் லஷ்மியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது அவருக்கு வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனின் அளவு 80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ஓட்டுனர் அர்ஜூன் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லஷ்மி சமீபத்தில் மயக்க நிலை தெளிந்து தனது கணவர் மற்றும் குழந்தை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் சிகிச்சையில் உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
காரணம், லஷ்மிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விடயத்தை கூறக்கூடாது என மருத்துவர்கள் கூறிய நிலையிலேயே உறவினர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.