பிறந்த நாளன்றே உயிரை நீத்த முக்கிய அரசியல் தலைவர்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி பிறந்தநாளான இன்று உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாராயணன் தத் திவாரி 1925 ஆம் ஆண்டு அக்டோபேர் 18 ல் பிறந்தார். இவர் 1984 – 85 மற்றும் 1988 – 89 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்திலும், 2002 முதல் 2007 வரை உத்ரகாண்ட் மாநிலத்திலும் முதல்வராக பதவி வகித்து, இருமாநிலங்களில்முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.மேலும் ஆந்திர மாநில கவர்னராகவும்,ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

93 வயதான என்.டி.திவாரி கடந்த வருடம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது .
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் காலமானார்

என்.டி.திவாரி தான் பிறந்த தினமான அக்டோபர் 18ஆம் தேதியிலேயே காலமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.