இன்று நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுமார் 30 வினாடிகள் நீடித்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என்று நாட்டின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளிவரவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
வெலிங்டனில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடமும் குலுங்கியது. இதனால் தற்காலிகமாக அவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது