தனக்காக விரதம் இருந்த மனைவியை கோபமடைந்த கணவன் 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் வசித்து வருபவர் தீபிகா.32 வயது நிறைந்த இவர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சௌஹான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதியினருக்கு 4 வயது மகனும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.
மேலும் வடஇந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழாவான “கர்வா சௌத்” அன்று தீபிகா தன்னுடைய கணவனுக்காக விரதம் இருந்துள்ளார்.
அன்றைய தினம் இரவு, அவருக்கு கணவருக்கு அதேபகுதியில் வசிக்கும் திருமணமான வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து அவரது கணவரிடம் தீபிகா கேட்டுள்ளார்.மேலும் அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே பயங்கர கைகலப்பாக மாறியது . இதில் ஆத்திரமடைந்த விக்ரம் 8 வது மாடியின் பால்கனியில் இருந்து தீபிகாவை கீழே தள்ளியுள்ளார்.
இந்நிலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தீபிகாவை பார்த்த அக்கம்பக்கத்தினர்,அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .ஆனால் அங்கு தீபிகா சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தீபிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபிகாவின் கணவர் விக்ரம் சௌஹானை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.