கொடூரத்தின் உச்சம், தன் இரு பச்சிளங்குழந்தைகளையும் தண்ணீரில் அமுக்கி கொன்ற அரக்க தாய்!

கணவர் மீதுள்ள அளவுகடந்த கோபத்தில் தான் பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வருபவர் ஷாம்.இவர் ரிக்‌ஷா ஓட்டுனரான பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா அம்தே .இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் ஷாமுக்கும், தீபாவுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.அதுமட்டுமின்றி ஷாம் தனது மனைவி தீபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஷாம் வழக்கம் போல தனது பணிக்கு சென்ற நிலையில் தீபா வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தார். அப்பொழுது கணவர் மீதான அளவுகடந்த ஆத்திரத்தில் தனது குழந்தைகளை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதன்பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து வேலை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்த ஷாம் மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாததை பார்த்து அனைவரிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார் .மேலும் நேரம் ஆனதால்அதிர்ச்சியடைந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சோதனை செய்த போது தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளும் சடலமாக இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து தீபாவையும் கண்டுபிடித்து விசாரணை போது கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரத்தின் உச்சம், தன் இரு குழந்தைகளையும் தண்ணீரில் அமுக்கி கொன்ற அரக்க தாய் ,வெளியான அதிரவைக்கும் காரணம்.!