ரணிலை அசிங்கப்படுத்தப் போய் சர்ச்சையில் சிக்கினார்!

கொழும்பில் நேற்று நடந்த பேரணியில் ரணில் விக்கிரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்ணித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறிசேன தனது நேற்றைய உரையில் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலொன்று நாட்டை ஆட்சி செய்தது என குறிப்பிட்டுள்ளார்.

வண்ணாத்திப்பூச்சிகள் ஆட்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன சிரேஸ்ட அமைச்சர்கள் எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை மாறாக ரணிலும் அவரது வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலுமே அனைத்து முடிவுகளையும் எடுத்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிசேனவின் இந்த உரைக்கு கடும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

சிறிசேன வண்ணாத்திப்பூச்சிகள் என்ற சொல்லை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஓரினச்சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர் சுனந்த தேசப்பிரிய வண்ணத்துப்பூச்சி என சிங்களத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை இழிவாக குறிப்பிடுவது வழமை என தெரிவித்துள்ளார். சிறிசேன இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.