மீண்டும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முதல் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த னிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது.

இந்தநிலையில், பெட்ரோலின் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.77.05 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.