காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு கான்ஸ்டபிள் செய்த கொடூரம்!

கர்நாடக மாநிலத்தில் ஜனனபாரதி காவல் நிலையத்தில் சந்திரசேகர் என்பவர் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார். அதே காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் உடன் பணிபுரிந்து வருகிறார். கான்ஸ்டபிள் சந்திரசேகர், அந்த பெண் காவலரிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணின் தொலைபேசி என்னை அவருக்கே தெரியாமல் பெற்று, அவரை தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அடிக்கடி அந்த பெண்ணிடம் தொலைபேசியில் மிகவும் தவறாக பேசி வந்தாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் சந்திரசேகர், அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண் தனது உயர் அதிகாரி கிரிஜாவிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கான்ஸ்டபிள் சந்திரசேகருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், சனிக்கிழமை இரவு பெண் காவலர் வீட்டிற்கு சென்று தனியாக இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து நள்ளிரவில் வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவரிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் அளித்த புகாரின் அடிப்படையில் கான்ஸ்டபிள் சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.