டி20 தொடருக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி ரெடி! களத்தில் இறங்கும் புதிய அணி!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியானது ஆஸ்திரேலியா – பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதற்காக 12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (கேப்டன்),
ரோஹித் சர்மா (துணை கேப்டன்),
ஷிகர் தவன், ராகுல்,
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),
தினேஷ் கார்த்திக்,
கிருனால் பாண்டியா,
குல்தீப் யாதவ்,
புவனேஸ்வர் குமார்,
பூம்ரா,
கலீல் அஹமது,
சாஹல்.

மேற்குறிப்பிட்டுள்ள 12 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சார்பாக விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதில், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் கண்டிப்பாக இடம்பெறுவார். ஆனால் சாஹல், கிருனால் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே இந்திய அணியில் பங்கு பெறுவார்.