அத்தனை பேர் வந்து செல்லும் இடத்தில் அரங்கேறிய கொடூரம்..?

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்பு அருகே நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அந்த வழியாக சென்ற நபர்கள், இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும் என்றும்,அவர் இறந்து 4 அல்லது 5 நாள்கள் வரை இருக்கும் என்பதால் அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிய நிலையில் உள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 நாட்களுக்கும் மேலாக ஒருவர் சடலமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.