பிரபல உதவி இயக்குனர் காதல் தோல்வியால் தூக்குபோட்டு தற்கொலை.!!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள யாதவள் தெருவை சார்ந்தவர் மனோகரன் (50). பூ வியாபாரியாக பணியாற்றி வரும் இவருக்கு மணி (வயது 23) என்கிற மகன் உள்ளார். இவர் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே., வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்த அவர் நேற்று தந்தை பணிக்கு சென்றவுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோகரன்., நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். தனது மகன் நீண்ட நேரமாக கதவை திறக்காமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்.

அப்போது இவரின் மகன் மணி தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த அவர்., மகனை எண்ணி கத்தி கதறியழுதார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரின் இல்லத்திற்கு சென்ற போது மணி தூக்கில் தொங்கியதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., தொழில் நுட்பக்கல்வி (டிப்ளமோ) பயின்றுள்ள மணி., திரைத்துறையில் சேர்ந்து பெரிய இயக்குனராக வரவேண்டும் என்று தனது இலட்சியத்தை வைத்துள்ளார். அதற்க்காக பல்வேறு கதைகளை எழுதிவைத்துள்ளார்.

இதற்க்காக கடந்த சில வாரத்திற்கு முன்னர் இயக்குனரின் கீழ் பணியாற்ற துவங்கியுள்ளார். காவல் துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது அவர் எழுதியிருந்த கடிதமொன்று கண்டெடுக்கப்பட்டது., அந்த கடிதத்தில் ” நீ இல்லாத உலகில் வாழ முடியவில்லை ” என்று எழுதியுள்ளார்.

இது குறித்து அவரின் தந்தையிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., மணி அந்த பகுதியில் உள்ள பெண்ணை காதலித்து வந்ததும்., அந்த பெண் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. காதல் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் இருந்த மணி தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.