நடிகர் ராதாரவி என்னை மிரட்டினார்: சின்மயி குற்றச்சாட்டு!

பிரபல பின்னணி பாடகியான சின்மயி மீடூ வாயிலாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த ஒரு மாதகாலமாக இந்த பாலியல் புகார் பரபரப்பாக பேசப்பட்டடு வந்ததையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கினர். இந்த சங்கத்தின் தலைவராக ராதாரவி பொறுப்பு வகிக்கிறார்.

சந்தா செலுத்தாத காரணத்தால் நான் நீக்கப்பட்டதாக சின்மயி தெரிவித்தாலும், யூனியல் குறித்து தவறாக பேட்டி கொடுத்த காரணத்தால் நீக்கப்பட்டதாக சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, யூனியல் 15 புகார்கள் விசாரணை நடத்தப்படாமல் இருக்கிறது என கூறிய காரணத்தால், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சங்க தலைவர் ராதாரவி தன்னை மிரட்டியதாக சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்த்து பேசியவர்களை ராதாரவி நீக்கி விடுவார். ஏற்கனவே எனக்கு ரெட் போடுவதாகவும் மிரட்டினார் என்று கூறினார்.