ஜனாதிபதி தந்தை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த துஷார இந்துநில் ஆபாச புத்தகம் ஒன்றினை வாசித்துக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதன்போது எழுந்து பதில் கூறிய துஷார இந்துநில்,
நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை, சத்துரிகா சிறிசேன எழுதிய “ஜனாதிபதி தந்தை ” என்ற புத்தகத்தையே வாசித்துக்கொண்டுள்ளேன்.
எனினும் இதில் சத்துரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதனைத்தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதனையே முஜிபூர் எம்.பி ஆபாசப் புத்தகம் படிப்பதாக கூறுகின்றார் எனக் குறிப்பிட்டார்.