- வாழைப்பூ
- கடலை பருப்பு – 1 கப்
- வர மிளகாய் – 4 ~ 6
- பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
- தேங்காய் துறுவல் – 5 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 2
- கறிவேப்பிலை – 10~15 இலைகள்
- பெருங்காயம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- வாழைப்பூவை பிரித்து, உள்ளிருக்கும் நரம்புகளை நீக்கவும்.
- வானலியில் எண்ணை விட்டு அடுப்பில் ஏற்றவும்.
- வாழைப்பூவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
- அரைத்த வாழைப்பூவைப் பிழிந்து, தண்ணீரை அகற்றி விடுங்கள்
- மிக்ஸியில் வரமிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் ஊறிய கடலைப் பருப்பையும் சேர்த்து 70% அரைக்கவும்.
- அரைத்த பருப்புடன், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய் துறுவல், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வாழைப்பூ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்