சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து ஒரு தொகை நாணயத்தாள்களை கடத்தி செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் குவைத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று மாலை குவைத் நோக்கி செல்லுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களின் பயண பொதியை சோதனையிட்டபோது, மறைத்து வைத்திருந்த ஒரு தொகை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதிகளிடமிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான இலங்கை நாணயத்தால்கள் உட்பட 2,410 குவைத் தினார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.