கொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு… பிரித்தானிய இளவரசியின் ரகசியம்!

லண்டனின் மிக கொடூரமான கொள்ளை கும்பல் தலைவனுடன் பிரித்தானிய இளவரசி மார்கரெட் நெருக்கமான உறவு வைத்துக் கொண்ட ரகசிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

இங்கிலாந்தின் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சகோதரியான இளவரசி மார்கரெட் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் காலமான இளவரசி மார்கரெட் கொண்டாட்டங்களை அதிகம் விரும்புபவர் என கூறப்படுகிறது.

கரீபியன் பகுதியில் அமைந்துள்ள Mustique தீவில் உள்ள இவரது விடுமுறை இல்லத்தில் இவர் தங்கும் நாட்களில் விடியவிடிய தொடர்ந்து பல நாட்கள் கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி 1970 காலகட்டத்தில் லண்டனை நடுநடுங்க வைத்த கொள்ளை கும்பல் தலைவனான ஜான் பின்டனுடன் இளவரசி மார்கரெட்டின் நெருக்கம் பிரித்தானிய அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியும் உள்ளது.

மட்டுமின்றி பின்டனுடன் இளவரசி மார்கரெட் உடல் அளவிலும் நெருக்கமாக இருந்துள்ளார் என்றும், கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள இளவரசியின் விடுமுறை இல்லத்தில் பின்டன் மூன்று வார காலம் இளவரசி மார்கரெட்டுடன் தனியாக தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியானது.

மேலும், கென்சிங்டன் அரண்மனையில் ரகசியமாக பின்டன் பல இரவுகள் தங்கிச் சென்றதும் பின்டனின் முன்னாள் காதலிகள் வழியாக அம்பலமாகியுள்ளது.

இளவரசியின் அழைப்பின் பேரில் முதன் முறையாக Mustique தீவுக்கு சென்ற பின்டனுடன் இளவரசி மார்கரெட் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், இந்த தகவல்களை தமது காதலிகளுடன் பகிர்ந்துகொள்ளும் பின்டன், எப்போதும் தெளிவாக எதையும் கூறியதில்லை எனவும் கூறப்படுகிறது.

பின்டனின் அழகில் மயங்கிய இளவரசி மார்கரெட், அவரது பேச்சு வழக்கையும், ஆபாச நகைச்சுவைகளையும் அதிகம் ரசித்துள்ளார்.

தனது ஆணுறுப்பு குறித்து அதிக பெருமையடித்துக்கொள்ளும் பின்டனிடம் Mustique தீவில் கொண்ட்டாத்தில் இருக்கும்போது இளவரசி மார்கரெட் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதைக் கேட்டு மிகுந்த உற்சாகமடைந்த பின்டன் இளவரசி மற்றும் அவரது பணியாளர் ஒருவருடன் தனியாக சென்று இளவரசியின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.

இளவரசி மார்கரெட் ஒரு தொல்பொருள் ஒன்றை ஆர்வத்துடன் ஆய்வு செய்வது போன்று பின்டனிடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஜான் பின்டனுடன் தமக்கு இருக்கும் உறவை இளவரசி மார்கரெட் எப்போதுமே மறுத்து வந்துள்ளார். 1943 ஆம் ஆண்டு ஒரு வாடகை டாக்ஸி ஓட்டுனருக்கு மகனாக பிறந்த பின்டன், தனது இளமைப் பருவத்தில் சிறைக்கும் சென்று வந்துள்ளார்.

பின்னர் திரைப்படத்தில் நடிகரான பின்டன் போதை மருந்து கடத்தலை தொழிலாக செய்து வந்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு கொலை குற்றம் தொடர்பில் கைதான பின்டன் தண்டனை பெற்றார். இதனிடையே இளவரசி மார்கரெட் தம்மைவிடவும் 17 வயது இளயவரான Roddy Llewellyn உடன் காதல் வயப்பட்டார்.

கொலைக்குற்றத்திற்கு தண்டனைபெற்ற பின்டனின் திரைப்பட்ட வாழ்க்கை முடிவுக்கு வந்தது மட்டுமின்றி அவர் பாலியல் தொடர்பான நோயால் கடும் அவதிக்குள்ளாகி 1993 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.