அதிமுகவின் அழிவு காலம் தொடங்கியது.! அடுத்தடுத்து அரங்கேறிய அய்யோ.. அம்மா.. கூத்துக்கள்.!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலை வார்த்தை யுத்தம், பேட்டிக்கு.. பதிலடி பேட்டி என்று இருந்த காலம் மாறி, தங்கள் கட்சிக்குள்ளேயே அடித்து கொள்ளும் காலம் அரங்கேறி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்ட்டி மோதல் இருந்த போதெல்லாம், இல்லை நாங்கள் ஒற்றுமையாக தான் செயல்படுகிறோம் என்று அந்த இரண்டு கோஷ்டியினரும் சொல்லி கொள்வார்கள்.

ஆனால், தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவோ, வேட்டி உருவாதல், ஜட்டியுடன் நிற்க வைத்தால், சேர் கொண்டு அடித்து கொள்ளுதல், உருட்டு கட்டை அடி, தர்ம அடி என்று அதிமுகவின் அமைச்சர்கள் முன்னாலே தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு அதகள படுத்தி வருகின்றனர். இது ஒருமுறை இருமுறை என்றல் பரவாயில்லை, இந்த மாதம் மட்டும் 4 வது முறை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்று அமைச்சர் கூறி கொண்டு இருக்கும் போதே, நாங்கள் இருக்கிறோம் என்று அமைச்சர்கள் முன்னாள் தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதூரில் நடந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் அதிமுகவினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் மற்றும் சின்னப்பன் ஆகியோருக்கு இடையே கூட்டத்தில் யார் முதலில் பேசுவது என்பதில் மோதல் ஏற்பட்டது. ஒரு கோஷ்டி மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்ல, மற்றொரு கோஷ்ட்டி சின்னப்பன் தான் பேச வேணும் என்று கூச்சலிட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இப்படி பேசிகிட்டு இருந்தா எப்படி.. யாரு முதலில் பேச வேண்டும் என்று அடித்து காட்டுங்கள் என்பதுபோல், இரு தரப்பும் காட்டு.. காட்டு என்று, தாக்கி கொண்டனர். இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒன்னும் செய்ய முடியாமல் கம்முனு நின்னார். பின்பு அமைச்சர், ஆடர்.. ஆடர்.. என்று சொல்ல அப்பவும் அடங்காத தொண்டர்கள் அடித்து கொண்டிருந்தனர். ஒருவழியாக தமிழக காவல் துறை தன் கடமை செய்து, கலவரத்தை கம்முனு மாற்றியது.

இப்படியே தொண்டர்கள் அடித்து கொண்டிருந்தா.. ஊரு ரெண்டு பட்டா.. கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல்.. எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்க, சொந்த கட்சியை காலி செய்த தொண்டர்கள் என்ற பட்டதோடு அதிமுக பரிதாப நிலைக்கு செல்லும் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்க….