சொர்க்கத்தில் உள்ள தனது தந்தைக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதிய 6 வயது சிறுமி!

பிரித்தானியாவை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் மேடிசன்.
40 வயது நிறைந்த தாமஸ் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதய நோயால் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் தனது தந்தை மீது மிகுந்த அன்பு வைத்திருந்த அவரது 6 வயது மகள்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த அப்பாவுக்கு, உங்களை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற ஆசைப்படுகிறேன், ஆனால் என்னால் உங்களை பார்க்க முடியாது என எனக்கு பிரித்தானியாவில் உயிரிழந்த தந்தைக்கு 6 வயது மகள் கிறிஸ்துமஸ் வாழ்த்து கடிதம் எழுதிய நிலையில் அதற்கு வந்த பதில் கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாமஸ் (40) என்ற நபர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதய நோயால் உயிரிழந்துவிட்டார்.

தாமஸ் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த அவரின் மகள் மேடிசன் (6) சொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த அப்பாவுக்கு, உங்களை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற ஆசைப்படுகிறேன், ஆனால் என்னால் உங்களை பார்க்க முடியாது என எனக்கு தெரியும்.

ஆனால் நீங்கள் என்னை பார்க்க முடியும், எனவே உங்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.எனக்கு உங்களை பார்க்கவேண்டும் என ஆசையாக உள்ளது .உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் நீங்கள் தான் என எழுதியிருந்தார்.

மேலும் இந்த கடிதமானது Royal Mail என்ற கொரியர் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில் இதனை கண்ட அந்த கொரியர் நிறுவனத்தினர் சிறுமி மேடிசனுக்கு பதில் அனுப்பியுள்ளனர்.

அதில், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை நாங்கள் அனுப்பி கொண்டிருக்கும் வேளையில் உன் கடிதம் எங்களுக்கு கிடைத்தது.

அதை நாங்கள் சொர்க்கத்தில் உள்ள உன் தந்தைக்கு அனுப்பிவிட்டோம். வாடிக்கையாளர்களின் கடிதத்தை பத்திரமாக அனுப்ப வேண்டியது எங்களின் கடமை.
உன் கடிதம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம் என தெரிவித்துள்ளனர்.

சிறுமி மேடிசனின் மன ஆறுதலுக்காக தங்கள் கடமையை மீறி இவ்வாறு செய்தோம் என தபால் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.