நாளை மறுதினம் முதல் பொதுமக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

பேரூந்து பயண கட்டணத்தை 4 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்

நாளை மறுதினம் நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 4 சதவீதத்தால் குறைக்க இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , குறைந்த பட்ச பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.